ஐ.ஐ.டி பொலிகாளைகளும் ‘மலட்டு’ச் சமூகமும்!

Posted in பகுக்கப்படாதது with tags , , , , , , on மார்ச் 19, 2012 by குட்டகொழப்பி

சென்னையச் சேர்ந்த தம்பதியினர் தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள செயற்கைக் கருவுறும் முறைக்குச் செல்லவிருப்பதால், தகுதியுள்ள விந்தணு தானம் செய்பவரைத் தேடி வருவதாக ஊடகங்களில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தகுதியான என்றால்………?

ஆரோக்கியமான, புகை மற்றும் இதர கெட்டப் பழக்கங்கள் இல்லாத முடிந்தால் அழகான, வெள்ளையான, உயரமான  ஐ.ஐ.டி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் போன்ற நிபந்தனைகளைகளை விதித்துள்ளனர். விரைவிலேயே இச்செயற்கைக் கருவுறுதலை செய்யவிருப்பதால், அன்பும் செழிப்பும் பொங்கித் ததும்பவிருக்கும் தங்களது வாழ்க்கையைத் தொடங்க அவசரமாக விந்தணு தானம் தேவை என்றும் கூறியுள்ளனர். (மதிப்பெண்கள் (CGPA) மற்றும் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தையும் நிபந்தனையாக வைக்க மறந்து விட்டனரோ). இதற்காக தானம் செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஐ.ஐ.டி பொலிகாளைக்கு  20,000 ரூபாய் தரவிருப்பதாகவும் விலை நிர்ணயித்துள்ளனர்.

படிப்பதற்கு நாராசமாக இருந்தாலும், இது போன்ற விஷயங்கள் சமூகத்தின் பிற தளங்களிலும் பிரதிபலிக்கின்ற காரணத்தால், அது விளைவிக்கவிருக்கும் அபாயத்தையும் இங்கு பரிசிலிக்க வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு குழந்தையில்லாத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கும் போது கூட பல நிகழ்ச்சி நிரல்களை அல்லது பிற்போக்குத்தனங்களை மனதில் நிறுத்தியே தங்கள் கோரிக்கையை அமல்படுத்துவதற்கு உடன்படுகின்றனர். தத்தெடுப்பதற்கு அவர்களின் சொந்த சாதியிலேயே பிறந்த குழந்தை அல்லது சமூகக் கட்டுமானத்தில் அவர்களுக்கு மேலிருக்கிற சாதியில் பிறந்த குழந்தை, நோய் நொடியில்லாமல் அங்க பாதிப்பெதுவும் இல்லாத குழந்தை போன்றவையே பிரதான கோரிக்கையாயிருக்கின்றன.

குறிப்பாக இவர்கள் வைக்கிற  முக்கியமான நிபந்தனைகள், தத்தெடுக்கப்படும் குழந்தைகள் கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரர்கள் அல்லது தெருவோரங்களில் வசிப்பவர்களுடையதாக இருக்கக் கூடாது என்பதே, இதற்கு அவர்கள் வைக்கிற வாதம் அக்குழந்தைகளைத் தத்தெடுத்து தத்தம் குடும்பச் சூழ்நிலைகளில் வளர்த்தால் கூட அது தனது இரத்த உறவின் சாதிய குணநலன்களையே கொண்டிருக்கும் என்பதே. ஆக சாதியின், வர்க்கத்தின் மேல்நிலையில் உள்ளவர்களே அதிக அறிவைக் கொண்டவர்களாகவும், ஒழுக்கச் சீலர்களாகவும் இவர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

மேலும் இவர்கள் பெண் குழந்தைகளை தத்தெடுப்பதையே வழக்கமாகக்  கொள்கின்றனர். இது தத்தெடுத்தவர்கள் இறுதிக் காலங்களில் ஆண் குழந்தைகளை அண்டி வாழ வேண்டிய நிர்பந்தம் வந்துவிடும் என்ற பயத்தினாலும், பெண் என்றால் கல்யாணம் ஆனவுடன் சென்றுவிடுவார்கள், சட்டப்படி சொத்துரிமை கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தினாலும் விளைந்ததே. ஆக எக்காலத்திலும் சொந்தக் குழந்தையானாலும், தன் பொருளாதார, சாதி நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார்கள். சீரழிந்து வருகிற ஒரு சமூகம் தான் விரும்பும் வாழ்க்கைக்கான விழுமியங்களை எத்தகைய விலை கொடுத்தேனும் தக்கவைத்துக் கொள்ளத் தயங்காது என்பதற்கான ஆதாரமே இது.

இதற்குச் சற்றேதும் குறைவில்லாத விழுமியங்களுடன் கொண்ட விளம்பரத்தைத்தான் அத்தம்பதியினரும் கொடுத்துள்ளனர். மேற்கொண்டு இச்செய்தியை அறிவியல் கொண்டு பார்த்தால்………… விளம்பரத்தில் கோரியுள்ளபடியே அத்தம்பதியினர் தாங்கள் விரும்பிய ஐ.ஐ.டி பொலிகாளைகளின் விந்தைப் பெற்று, செயற்கை முறையில் கருவுறுதல் மூலம் குழந்தை பிறந்தால் கூட அக்குழந்தை வளர்ந்து அதன் இலக்கை அடைய முடியுமா என்பது நிச்சயமற்றது.

ஏனெனில் சிந்தனை, செயல் மற்றும் வாழ்வு போன்றவை அவரவர் வாழும் புறச்சூழலைப் பொருத்தே அமையும். அதன் தாக்கமே ஒருவர் பகத்சிங்காக மாறுகிறாரா அல்லது எட்டப்பனாக மாறுகிறாரா என்பதை முடிவு செய்யும். அது ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் மரபணுக்களைப் பொருத்து அமைய எள்ளளவும் வாய்ப்பில்லை. மரபணுக்கள் மூதாதையரின் உடல் கூறுகளின் தன்மைகளான நிறம், கண்ணின் கருவிழி, உடலின் வாகு போன்றவற்றைத் தான் கடத்தும். அன்றி, கருத்து, சிந்தனைக் கூறுகளை அல்ல.  ஆகையால் அது அப்துல் கலாம் விந்தணுவாக இருந்தால் கூட பிறக்கும் குழந்தை அவரைப் போன்று காமடி அறிவாளியாகப் பிறக்கும் என்பது அறிவீனம். இருந்தும் தற்போது நிலவுகிற சமனற்றச் சமூகத்தில் பெருஞ்சுயநலமிக்க பெற்றோர்களின் வளர்ப்பாலும், அவர்களால் ஊட்டப்படுகின்ற சமூகத்தைப் பற்றிய கருத்தோட்டங்களாலும் வளர்ந்து வருபவன் சுயநலம் மிகுந்த பிழைப்புவாதியாக மாறவே வாய்ப்புள்ளது. அரிதும் அரிதான வாய்ப்புகளில் மட்டுமே இவர்கள் சமூகப் பிரக்ஞையுள்ளவர்களாக மாற இயலும். இதுவும் அத்தகைய அரசியல், தொடர்பு, இயக்கங்கள், மூலமே சாத்தியம். ஆக பிறக்கப் போகும் குழந்தையின் திறனை விந்தணுக்களின் மூலம் நிர்ணயிப்பதென்பது அறிவீனம்.

ஐ.ஐடி மாணவர்கள் மட்டுமே வேண்டும் என்பது, அவர்கள் நன்றாகப் படிக்க கூடிய நல் விழுமியங்களைக் கொண்டுள்ளவர்கள் என்பதைத் தாண்டி பெரும்பாலானவர்கள் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இப்படி மறைமுகமாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது சைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என்ற பார்ப்பன மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

தங்கள் பேச்சு முதல் நடை, உடை, பாவனை, உணவுப்பழக்கம், சாங்கியம் பார்த்தல் வரை அனைத்தையும் பார்ப்பனர்களைப் போலவே (இன்னும் சொல்லப் போனால் அவர்களை விட ஒரு படி மேலே) செய்து கொண்டிருக்கும் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கப் பெற்றோர்களின் சிந்தனைச் சொரிதலால் வந்த குழந்தையே இது போன்ற விந்து விருப்பம். ஐ.ஐ.டியனர் ஏதோ இயற்கையிலேயே அறிவுச் செழிப்புடன் பிறந்தவர்கள் போலவும் மற்றவர்கள் இவையெதுவும் இல்லாததால்தான் மற்ற கல்லூரிகளில் படிப்பதாகவுமான ஒர் கருத்து இவ்விளம்பரத்தின் மூலம் பிதுங்கி வருவதைக் காணலாம்.

நடுத்தர, மேல்தட்டு வர்க்கப் பெற்றோர்கள் குறிப்பாக பார்ப்பன பனியா சாதிகளைச் சேர்ந்தவர்கள் சிறுவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டி கனவுகளை ஊட்டி அதற்குத் தேவையான பாடங்களை எந்திரகதியில் மனதில் உருவேற்றிவிடுகிறனர். மாணவர்களுக்கோ சிறு வயது முதல் வாழ்வின் அத்துனை அம்சங்களையும் இழந்தாலும் ஐ.ஐ.டி ஒன்றே வாழ்க்கை போன்ற என்ணங்கள் மனதில் பதிய வைக்கப்படுகிறது. தேர்வுகளில் தான் விழுங்கியதைத் துப்பும் வேலையை கச்சிதமாகச் செய்வதால் இடமும் கிடைத்துவிடுகிறது. இதில் அறிவிற்கு என்ன வேலை?

பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இது போன்று சிறு வயதில் இருந்தே பயிற்சியெடுக்க வாய்ப்பில்லாமல் போவதாலும் இங்கு இடஒதுக்கீடு இல்லாதபடியாலும் அவர்கள் இங்கு சேர்வதைப்  பற்றி யோசிப்பதில்லை. ஆக தான் வாழும் சமூகம் சமூகத்தில் காணப்படுகிற ஏற்றத்தாழ்வுகள் போன்ற எதையும் பார்க்காத/பார்க்க விரும்பாத இவர்களின் குருட்டுக் கண்களுக்கு பணத்தின் இருப்பு மற்றும் அதன் மீதான அதீத காதல் மட்டுமே தேவை என்பதாக கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் பிற்காலத்தில் அதுவாகவே ஆகின்றனர். எனவே இங்கு சேர்வதற்கான தகுதி திறமை எல்லாம் சாதி வர்க்க ரீதியில் அமைந்தது என்பதையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  அதனால் தான் நன்றாகச் சம்பாதிக்கப் கூடிய, சந்தையில் அதிக விலைபோகும் ஐ.ஐ.டி பொலிகாளைகளை இவ்விளம்பரம் கோருகிறது.

இந்த ‘அறிவுஜீவி’களின் யோக்கியதையை, இச்சமூகத்தில் குறைந்த பட்சம் தனது இருத்தலுக்கான போராட்டத்தைக் கூட செய்ய லாயக்கற்ற குப்பைத் தொட்டிகளாக விளங்குவதன் மூலம் காணலாம். தன் கூடப் படித்த சக மாணவன் தற்கொலை செய்து கொள்வதைப் பார்த்து கண்டும் காணாமல் வாய் மூடி ஊமைகளாய் இருக்கும் மாணவர் சமூகத்தை படைப்பதுதான் இந்த ஐ.ஐ.டிக்கள். சமீப காலங்களில் ஐ.ஐ.டிக்களில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளும், சென்ற மாதம் இந்திய அறிவியல் கழகத்தில் (IISC- Bangalore) மன உளைச்சல் மற்றும் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட பராக் சதாலே என்ற பேராசிரியரைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

அதீத மன உளைச்சல், தனிமை என்றால் சாவு ஒன்றுதான் தீர்வு போல, குறைந்தபட்சம் அதை எதிர்த்துப் போராடக்கூட வக்கில்லாமல் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கின்றனர். இவர்கள் இச்சமூகத்தின், இக்கல்விமுறையின் பலிகடாக்கள், அதன் நேரடித் தோல்வியால் ஏற்பட்ட விளைபொருட்கள், ஒட்டுமொத்த வினைகளின் எதிர்வினைகள்.

இது போன்ற விளம்பரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுவனவாக இருந்தாலும் இவ்வகையறா விளம்பரங்கள் மேலை நாடுகளில் பரவலாகக் காணமுடியும். அங்கு அதற்கான ஆராய்ச்சிகளும் நடந்து கொண்டுதான் வருகின்றன. டிசைனர் விந்தணு, டிசைனர் பேபி போன்ற மாய்மால வார்த்தைகள் அங்கு பிரபலம். பிறக்கப் போகும் உங்களுக்கான குழந்தைகளை உங்கள் விருப்பப்படி டிசைன் செய்து கொள்ள வேண்டுமா? நல்ல அறிவுடன், பச்சை நிறக்கண்களுடன், அழகான முடியுடன், பளிச்சென்ற நிறத்துடன், உயரமாக வேண்டுமா ! இது போன்ற சொற்களைத் தாங்கிய விளம்பரங்களும் சர்வ சாதாரணமே.

ஆனால் நமக்கு இது போன்ற விளம்பரங்கள்  வருவது புதியதாயினும் இலை மறை காயாக அத்தகைய விழுமியங்கள் நம் சமூகத்தில் காலங்காலமாகவே இருந்து வருகின்றன. வெகு நாட்கள் மூடியுள்ள முகத்திரையால் பயனேதும் இல்லை என்பதால் தனது போலி முகத்தை கிழித்தெரிந்துள்ளது அவ்வளவே! தன்னை அடையாளப்படுத்துவதன் மூலம் மக்களின் பொதுப்புத்தியினூடாக இது போன்ற செயல்கள் தவறானதல்ல என்றும், அது தனிமனிதர் விருப்பு வெறுப்பைச் சார்ந்தது என்றும் நிலைநிறுத்தப்படுகிறது.

ஏற்கனவே பல ஏற்றத்தாழ்வுள்ள, அசமத்துவப் படிநிலைகளைக் கொண்ட இச்சமூகம் இது போன்ற வீரியமிக்க ஒட்டுரக டிசைனர் குழந்தைகளை உருவாக்கும் பட்சத்தில் (உயிரித் தொழில் நுட்பம் மூலமாக சாத்தியமே என்கிறார்கள் அறிஞர்கள்) அது இச்சமூகத்தில் தனக்கான முரண்பாடுகளை அதிகமாக ஏற்படுத்திக்கொள்ளுமே ஒழிய அதனால் வேறெதுவும் பயனில்லை. இது போன்ற டிசைனர் குழந்தைகள் சமூக, பொருளாதார மற்றும் அறிவுத்தளங்களில் தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொண்டு அசமத்துவத்தின் புதிய படிநிலையில் விட்டு விடும் அபாயமும் உள்ளது. ஆனால் இங்கு விந்தை தானமாகக் கொடுப்பவரின் பின்புலம் பற்றி அறிய சட்டம் இடம் கொடுக்காது என்ற போதிலும் நிலவுகின்ற சட்டத்தின் ஓட்டைகளின் மூலம் தாங்கள் விரும்பும் டிசைனர் விந்துவைப் பெற சாத்தியம் இருக்கவே செய்கிறது. டிசைனர் குழந்தைகள் தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத பட்சத்தில் அப்பெற்றோர்களால், குழந்தைகள் முற்றிலும் நிராகரிக்கப்படுவதற்கான முகாந்திரங்களும் உள்ளது.

மரபணு தொழில்நுட்பம் (Genetic Engineering)  இல்லாமல் இயற்கையாகவே டிசைனர் விந்துக்களைக் கொண்டுள்ளதாகக் கற்பிக்கப்படும் பார்ப்பன ஐ.ஐ.டியினர், பொலிகாளைகளாக மாறும்பட்சத்தில், வீரியமற்ற இம்’மலட்டு’ச்சமூகம் மேலும் மலடாகி போகுமே அன்றி அறிவார்ந்த சமூகமாக மலர முடியாது.

அறிவும், திறனும், சமூக பிரக்ஞையும் சமூக நடைமுறைகளில்தான் மலருமே அன்றி டிசைனர் விந்துவால் உருவாக்க இயலாது. உடல் ஆரோக்கியத்தின் மேம்பட்ட தன்மையை வேண்டுமானால் டிசைனர் விந்து கொண்டு வரலாம். ஆனால் சமூக ஆரோக்கியத்தை இது வழங்கி விடாது. மூதாதையரின் உடற்கூறுகளைத்தான் மரபணு தாங்கி வருகிறதே அன்றி அவர்களின் சமூக வரலாற்று உணர்வை அல்ல. அது வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் வடிக்கப்படும் ஒன்று.

 

பாரதீய ஜ(ல்சா) பார்ட்டி

Posted in பகுக்கப்படாதது with tags , , , , , , on மார்ச் 19, 2012 by குட்டகொழப்பி

 

  ஒருமுறை ரெண்டு முறை அல்ல பல முறை கீழே விழுந்து அம்பலப்பட்டுப் போனாலும் வடிவேலு கணக்காக துடைத்துவிட்டு போகும் பெருந்தன்மை இக்கட்சியினரைத் தவிர மற்றவருக்கு குறைவே.

கர்நாடக மாநில சட்டசபையான விதான சவுதாவில் அன்றைய தினம் நடந்த விவாதத்தில் மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் பற்றியும், சனவரி மாதம் சிந்தகி என்ற பகுதியில் பாகிஸ்தான் கொடியேற்றிய ஆர்.எஸ்.எஸ் காலிகளைப் பற்றியும்,  கேரள அரசு போல சுற்றுலாவின் மூலம் பெரிய அளவில் கல்லாக்கட்ட  அம்மாநில அரசால் உடுப்பி மாவட்டத்தின் செயிண்ட் மேரிஸ் தீவில் நடத்திய ரேவ் பார்ட்டி  (மிதமான சத்தத்தில் புகைமூட்டத்துடன் ஆரம்பித்து, நேரம் செல்ல செல்ல வெறியூட்டக்கூடிய இரைச்சலுடன் பலான விஷயங்களும் நடக்கும் நிகழ்வு) பற்றியும் விவாதித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அமைச்சர்களின் அக்கப்போரும் நடந்திருக்கிறது.

ரேவ் பார்ட்டியில் நடக்கும் பலான விஷயங்களை, (அதாவது பார்ட்டியில் என்னவெல்லாம் செய்வார்கள் கடைசியில் எப்படி முடியும்) பற்றி தெரிந்து கொள்ளவே  அந்த ஆபாசக்காட்சியைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள்.சட்டமன்றத்தில் ஆபாசக் காட்சிகள் பார்த்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்கள் முதலில் மறுத்தாலும் இறுதியில் பெருந்தன்மையாக மக்களின் விருப்பத்தின்படி ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளனர்.

இது போன்ற புகார்கள் வருவது பாரதீய ஜல்சா பார்ட்டிக்குப் புதிதல்ல என்பது உலகறிந்ததே. எடியூரப்பாவின்  நெருங்கிய நண்பரும் முன்னாள் உணவு மற்றும் நுகர்பொருள் அமைச்சரான ஹலப்பா, ஷிமோகா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது தனது நண்பரான வெங்கடேசமூர்த்தியின் வீட்டில் விருந்தினராகத் தங்கியிருக்கிறார். இரவில் நெஞ்சு வலி வந்தபொழுது மாத்திரை வாங்கிவரச் சென்ற நண்பர் திரும்பி வருவதற்குள் சில்மிஷம் செய்ய ஆரம்பிக்க நண்பனால் கையும் களவுமாகப் பிடிபட்டார். இறுதியில் முயற்சி வீணாகிப் போக, இலக்கையடையாமல் மனமுடைந்த ஹலப்பா பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்து எடியூரப்பாவின் அதிகாரப்பூர்வமற்ற செய்தித் தொடர்பாளரும் பல சமயங்களில் அவருக்கு ஆபத்பாந்தவனாக விளங்கிய திருவாளர் ரேணுகாச்சார்யாவின் லீலைகளும் பட்டியலிடமுடியாதவை. ஷிமோகாவில் உள்ள பாபுஜி ஆயுர்வேத மருத்துவமனையில் செவிலியாக வேலைசெய்து கொண்டிருந்த ஜெயலஷ்மிக்கும் இவருக்கும் இருந்த தொடர்பு அம்மாநில அரசியல் மட்டத்தில் அனைவருக்கும் பரிச்சயம். புதிய மருத்துவமனை கட்டுவதில் ஏற்பட்ட பிணக்கால், இருவரும் நெருக்கமாயிருந்த புகைப்படத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார் ஜெயலஷ்மி. இதைக் கண்டு சற்றும் அசராத  அவர் தன் அரசியல் பலத்தால் செய்தியை இருட்டடிப்பு செய்ய நினைக்க, இறுதியில்  சாதாரண எம்.எல்.ஏ வான அவரை  அமைச்சராக்கி அழகு பார்த்தார் முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

ஆனால் இப்பொழுதோ அமைச்சர்களை கவுரவிக்க முடியாமல் போன முதல்வர் சதானந்த கவுடாவிற்கு இக்கோழைச்ச்செயல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கூடும். போயும் போயும் எல்லாரும் பார்க்கும் ஆபாசக் காட்சியைப் பார்த்து பதவி போவதற்கு, ப்ராக்டிகலாகவே செய்து பார்த்து பதவியைக் கொடுத்திருக்கலாம் என்று நினைத்திருக்க்க் கூடும். தனித்துவமான கட்சி (party with difference)  என்று தங்களைப் பறைசாற்றிக்கொள்ளும் இவர்கள் முதன்முறையாக தாங்கள் சொல்வதெல்லாம் உண்மை, அதைச் செய்தும் காட்டுவோம் என்று நிரூபித்துள்ளனர். இருக்காதா பின்ன, பள்ளிகளில் காமக்கதையான ராமாயணத்தை போதிக்கவேண்டும் என்று கூறுபவர்கள் சட்டசபையில் அதற்கான ஒத்திகையில் ஈடுபடுவதில் தவறென்ன இருக்கிறது.

ராம சேனா வானரங்கள் எங்கு போய் ஒளிந்து கொண்டார்கள்? காதலர் தினங்களில் லவ் ஜிகாதிகளாக மாறிவிடும் நேரங்களிலும், நள்ளிரவில் நடக்கும் ரேவ் பார்ட்டிகளிலும் இந்து கலச்சாரத்தைத் தேடிய இவர்கள், இந்து கலாச்சாரம் கிழிந்து நிர்வாணமாகி தன்னை அப்பட்டமாகிக் காட்டிக்கொண்டிருக்கும் இந்நேரம் இவர்களின் மௌனக்கலாச்சாரம் கவலையளிக்கவே செய்கிறது. ஜல்சா பார்ட்டியோ அல்லது அதன் மகளிரமைப்போ பிங்க் ஜட்டியை பரிசளிக்கலாம் என்ற பயத்தில் வானரங்கள் கைவிட்டிருக்கலாம். ஒருவேளை மும்மூர்த்திகள் பார்த்தவை சுதேசியா அல்லது விதேசியா எனக்கண்டறியும் முயற்சியில் இருக்கலாம். வெளிநாடுகளில் புகழ்பெற்ற ரேவ் பார்ட்டி பற்றித்தான் இவர்கள் அவ்வீடியோவில் ஆராய்ச்சி செய்தார்கள் என்றால் அவ்வீடியோ கண்டிப்பாக விதேசி வகையறாவகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதைப் பற்றி வானரங்களிடம் தெரிவிக்கவேண்டிய கடமை நமக்குள்ளது.

சட்டசபையில் ஆபாசமாகக் கத்திப்பேசுவது, நாக்கைக் கடித்துக் கொண்டுப் பேசுவது, நாற்காலியைத் தூக்கியெறிவது, காகிதத்தைக் கிழித்தெறிவது, மைக்கை உடைப்பது, ஆழ்ந்த சயனத்தில் இருப்பது, ஆளாளுக்கு அடித்துக் கொள்வது, மாறி மாறி வேஷ்டி புடவையை உருவிக்கொள்வது என எவ்வளவோ செய்தாகிவிட்டது. காலத்திற்கேற்ப பழைய  வெர்ஷன் மாறி புதிய வெர்ஷன் வேண்டுமென்பதால் ஆபாச வீடியோவில் ஆரம்பித்து இனி வரும்காலங்களில் செய்முறைத் தேர்வையும் நேரடியாக நிகழ்த்தி புதிய சரித்திரம் படைக்கலாம்.

தொடைகளுக்கிடையே மட்டும் தான் இவ்வுலகமுள்ளது என்ற  நினைப்பில் சர்வகாலமும் லயித்திருப்பதற்கும் ஒரு திறமை வேண்டுமல்லவா. இவ்வுலகத்தை அகண்ட பாரதமாக்கும் முயற்சியில் இப்பொழுது தொடைகளுக்கிடையில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். அகண்ட பாரதத்திற்கான தேடலில் சில மாற்றங்கள் வருமென்றாலும் அதைப் பெரிது படுத்தமுடியாது. போர்த்தந்திரமானாலும் செயல்தந்திரமானாலும் இறுதியில் அகண்டபாரதம் ஒன்றே இலக்காவதால் அதை எங்கு வேண்டுமானாலும் தேடலாம். ரேணுகாச்சார்யா ஜெயலஷ்மியிடமும், ஹலப்பா அவருடைய நண்பரின் மனைவியிடமும், இம்மும்மூர்த்திகள் கைப்பேசியின் பலான படங்களினூடாகவும் தேடியிருக்கின்றனர். இடமும் பொருளும் மாறினாலும் தடைகளைத்தாண்டி அகண்ட பாரதத்தையடைய எத்தனிக்கும் இவர்களின் முயற்சிகள் பாராட்டப்படக் கூடிய ஒன்றே.

கடவுளின் வேலையே அரசின் வேலை (Governments work is God’s work) என்ற முழக்கத்துடன் கம்பீரமாக எழுந்தருளியிருக்கும் கர்நாடக சட்டமன்றக் கட்டிடமான விதான சவுதாவில் அதை நிரூபிக்கும் வகையில் ராம லீலைகளில் ஈடுபட்டு வரும் அவ்வரசின் அடிப்பொடி மந்திரிகள் மேலும் லீலைகளில் ஈடுபட்டு ராம ராஜ்ஜியத்தை அடைய எல்லாம் வல்ல அந்த ராமனை வணங்குவோம்.

சில வருடங்களுக்கு முன்பு “ யாரெல்லாம் இந்துத்வாவிற்கு எதிராகப் பேசுகிறார்களோ அவர்கள் தலை துண்டிக்கப்படும்” என ஆர்ப்பரித்த ரேணுகாசவுத்திருக்கு ஹலப்பா விஷயமும் தெரியும், மும்மூர்த்திகளின் லீலைப் பற்றியும் தெரியும். அதுசரி………!!!!!! இந்து மதத்திற்கு எதிரான இக்கலாச்சாரச் சீர்கேட்டில் ஈடுபட்ட இவர்களின் தலைமட்டும்தான் துண்டிக்கப் படவேண்டுமா…….அல்லது……??

 

கோ-பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற மாதிரி………

Posted in ஈழம் with tags , , , , , , , on ஏப்ரல் 24, 2011 by குட்டகொழப்பி

கோ – விமர்சனம்

நேற்று (23.04.11) படத்திற்குப் போகலாம் என்று என் அறை நண்பன் கூப்பிட, அன்று ரிலீஸாகியிருந்த கோ படத்திற்குப் போகலாம் என்று சொன்ன நண்பனுடன், அன்றிரவே படம் பார்க்கக் கிளம்பினேன்.
கவனிக்க…….
கதை வசனம் – க்ரைம் சுபா (திரில்லர் நாவல் எழுதும் சுரேஷ்-பாலகிருஷ்ணன்)
இயக்கம் – கே.வி.ஆனந்த் (கனா கண்டேன், அயன் படம் எடுத்த மாபெரும் இயக்குனர்)

நாய்களா (கே.வி.ஆனந்த், சுரேஷ், பாலகிருஷ்ணன்) ஒங்க அரிப்புக்கு நக்ஸல் தான் கெடச்சாங்களா …நாட்டுல படம் எடுக்க கண்ட கருமங்கள் இருக்க இவர்கள் உங்க வாயிக்கு அவல் ஆகிட்டாங்க. பேண்டவன விட்டுட்டு பீய வெட்ற கதையா எவனோ திருடுறான், எவனோ பாம் வெக்கிறான், எவனோ கொல பன்றான், ஆனா நாட்ல எது நடந்தாலும் அதுக்கு நக்ஸல் தான் காரணமா?அரசு தான் தீவிரமாக இது போன்ற விஷம வேலைகளை செய்கிறது என்றால்,இவனுங்களும் சேர்ந்து…… நல்லா இருக்குதுடா ஒங்க கத………

சொல்லப்போனால் இன்னும் பல சொல்லி இவர்களைத் திட்டித் தீர்க்கலாம் என்றுதான் ஆசை, ஏனென்றால் திட்டுவதற்கு மேல் அப்படத்தில் ஒன்றுமில்லை, அனால் படிப்பவர்களுக்கு சலிப்பு தட்டக் கூடாதல்லவா , அதுமட்டுமல்லாமல் தர்க்க ரீதியில் விமர்சனம் செய்யும் பொழுதுதான் மக்களும் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பதாலேயே கடுமையான வார்த்தைகளைத் தவிர்க்க விரும்புகிறேன், மீறி வந்து விட்டால் அது உண்மையான கோபத்தின் வெளிப்பாடே என புரிந்துகொள்ளவும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு வங்கி கொள்ளையடிக்கப்படுகிறது, முகமூடிகளுடன் வெளியே வரும் கொள்ளயர்களை ஒரு தின பத்திரிக்கை போட்டோகாரனான ஜீரோ பார்த்துவிடுகிறார், அவர்கள் வேனில் ஏறி தப்பிக்கும் பொழுது வித விதமாக (பீட்டர் ஹெயின் உதவியால்) பறந்து பறந்து படமெடுத்துத் தள்ளுகிறார் ஜீரோ, இதை அவர்கள் பார்த்து ஜீரோவைப் பிடிக்க ச்சேசிங் செய்து வர….பலவித தில்லாலங்கடி வேலை செய்து தப்பிக்கிறார் ஜீரோ. தான் எடுத்த போட்டொக்களை போலிஸ் மாமாக்களிடம் காண்பிக்க …ஆஹா இதெல்லாம் நக்சல் வேலப்பா என அவரும் ஆரூடம் சொல்ல, ஹ்ம்ம்… இந்த நக்சல் கோயம்புத்தூருல கொண்டு வெச்சவன், இவன் தருமபுரில குண்டு வெச்சவன் என ஒவ்வொரு தீவிரவாதிகளையும் அடையாளம் காண்பிக்கிறார் போலிஸ் மாமா.

இதனால் ஜீரோவுக்கு நக்சல் வெறுப்பு வருது…கூடவே பாக்குற பாமரனுக்கும் வெறுப்பு வரனுமே…ச்சே நக்ஸல்னாலே இப்படித்தான் போல என நினைக்கனுமே… அதுக்காகத்தான படம் எடுத்ததே…….. இந்த தேசபக்தி கோமானுங்க இருக்கானுங்களே!!!

சரிதான் நக்சல் தான் ஒங்க போதைக்கு ஊற்கா போல என நினைத்துக்கொண்டே படம் பார்க்க…..மேலும் மேலும் அதிகமா தேசபத்தி போத ஏற….அதிகமா ஊற்கா தொட்டுக்க ஆரம்பிக்கிறான் நம்ம தேசபத்திகாரன்…..அத பாக்குற நமக்கும் ஜிவ்வுனு கோவம் ஏறுது……பாமரனுக்கும் தேசபத்தி போத ஏறுது……கூடவே ஹீரோயினு போர் நடந்தப்ப ஈழம் பத்தி கவர் ஸ்டோரி எழுதினவங்கலாம்….. இது ஒரு முற்போக்கு போதை போல ( படம் எடுத்தவங்களுக்கும் ஈழம் பற்றியான செய்தி தெரியுதுள்ளதாம்-ஈழம் மற்றொரு ஊறுகாய்)

அப்புறம் இவனுங்க எப்படி லாவகமா சரக்கடிச்சுகினே ஊற்கா தொட்டுக்கிறானுங்கன்னு பாப்போம்

அடுத்ததா நாட்ட காப்பாத்த, சிறகுகள் என்கிற இளைஞர்கள் இயக்கம் ஆரம்பித்து பிழைப்புவாதிகளாக இருக்கும் இளைஞர்களை தேர்தலில் நிற்க வைத்து செயிக்கிறாரு நம்ம செகண்டு ஹீரோ….ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையில், அவர்கள் கொடுக்கும் இன்னல்களுக்கிடையில் (எறிகற குடிசையில் பொம்பளையையும், ஒரு குழந்தையையும் காப்பாத்துறது, சிறகுகள் நடத்துற பொதுக்கூட்ட மேடையில பாம் வெக்கிறது- அங்க ஜீரோவோட பெண் பிரண்டு அப்புறம் 30 க்கும் மேலான பொதுமக்கள் சாகிறது, மாற்று கட்சியினர் சிறகுகள் குழிவினரை அடித்து நொறுக்குவது – இது எல்லாத்தையும் நம்ம ஜீரோ படம் புடிச்சு சிறகுகளுக்கு பப்ளிக்குட்டி தேடி கொடுக்கிறது,அதனால தேர்தல்ல சிறகுகளுக்கு அதிக ஓட்டு உழுதாம் ) செகண்டு ஹீரோ ஜெயிச்சு சி.எம் ஆகுறாரு. உடனே 20 நக்சல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குறாரு நம்ம சி.எம். இப்பொதான் நம்ம ஜீரோ களத்துக்கு வந்து எல்லா உண்மையையும் கண்டுபுடிக்கிறாரு.

அதாவது….. நக்சல் தீவிரவாதிங்கல்லாம் சேந்து நம்ம செகண்டு ஹிரோ சி.எம் ஆக செலவு செஞ்சு படிக்க வெக்கிறாங்க, சிறகுகள்ல கொஞ்சம் பேரு தேர்தல்ல ஜெயிச்சு நக்சலுக்கு ஆதரவா குரல் கொடுக்க, போராட, இந்த நக்சல் கும்பல் பல தில்லாலங்கடி வேல செய்யுது. (அந்த தீய வெச்சது குடிசைல இருந்த நக்சல் பெண்தானாம், நக்சல் கும்பல் தான் சிறகுகள் கும்பல ஓட ஒட விரட்டி அடிச்சுதாம்,பொதுக்கூட்ட மேடைல அனுதாப ஓட்டு வாங்க செகண்ட் ஹீரோவோட சேந்து பாம் வெச்சதும் இவுங்கதானாம்)
இதெல்லாம் தெரிஞ்சவுடனே நம்ம ஜீரோ அந்த நக்சல் கிட்ட போய் ஏன்டா நீங்கல்லாம் ட்ரெயின்ல பாம்வக்கிறது, திருடுறது இப்படில்லாம் பன்றீங்க என கோபம் கொப்பளிக்க கேட்க, நீங்கல்லாம் ஒடுக்கப்பட்டவங்களா இருந்தா உங்களுக்கு எங்க கஷ்டம் தெரியும்டா என நக்சல் சொல்ல, போதை தலைக்கேறிய நம்ம ஜீரோ, என்னங்கடா? வெளையாடுரீங்களா,அரசியல் வாதிங்க ஊழல்,லஞ்சம்னு சொல்ற மாதிரி நீங்க ஒடுக்கப்பட்டவனுங்கன்னு சொல்லி ஏமாத்துறிங்களா என தேசபத்தி போதையேறி நக்சல் தீவிரவாதியை வாங்கு வாங்குவென வாங்குகிறார். சரியாக இங்கதான் நம்ம பாமரனின் சாதாரண நக்சல் வெருப்புக்கு மேலும் லிட்டர் கணக்கில் எண்ணெய் ஊற்றி, சாதாரணமாக எறியும் கொல்லியை பெருந்தீயாக்குகிறான் டைரக்டர்.

நக்சல்களின் உண்மையான தியாகத்தை மறைத்தும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்து எள்ளிநகையாடும் இப்படம் புரட்சியாளர்களின் உணர்வுகளைக் காதல் மூலம் மாற்றலாம் என கேலி செய்த அல்லது அவர்களின் உண்மையான போராட்டத்தை மறைத்து ஒரு பெண்ணிற்காக உயிரை விடக்கூடியவர்களாக சித்தறித்து எடுக்கப்பட்ட கழிசடைகளான உயிரே, ராவணன் படத்தைவிடவும் மிக மோசமான முன்னுதாரணத்தைக் கொடுக்கிறது இப்படம்.கண்ட கண்ட மூன்றாம் தரப்படங்களை எடுத்து அலுத்துவிட்ட இவர்களுக்கு முற்போக்கு போதை ஏறி பேராண்மை, கோ போன்ற குப்பைக்கூளங்களை எடுக்க ஆசைவந்ததன் விளைவே இப்படம்.

நக்சல் புரட்சியாளர்களை நாட்டின் கொடூரமான, மனிதத் தன்மையில்லாத, எந்த மொராலிட்டியும் இல்லாமல் திரியும் லும்பன் கூட்டமாக காண்பிக்கிறது இப்படம்.பல ஆண்டுப் போராட்டத்திற்குப் பிறகு, சமீப காலங்களில் அவர்களுக்கென உருவாகியிருக்கும் சில ஆதரவு சக்திகளை மடை மாற்றவும், பாமரர்களுக்கு அடி மனதில் நக்சல் எதிர்ப்பு வெறியை ஊட்டவும் திட்டமிட்டே எடுக்கப்பட்ட படம் இது. இன்னும் சொல்லப்போனால் இது உளவுத்துறையின் ஸ்பெஷல் புராஜெக்ட் ஆக இருக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. நக்சல்கள் ரயிலில் குண்டு வைத்துவிட்டார்கள், பல ராணுவ வீரர்களைக் கொன்று விட்டார்கள் என ஊடகங்களுக்கு செய்திகளைக் கொடுக்கிற அரசு, டிவி சேனல்கள் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்கள், குழந்தைகள் கதறியழுவதை லைவ் டெலிகாஸ்ட் செய்து துட்டு பார்க்க மறுபக்கம் சந்தடி சாக்கில்லாமல் ஒரு நிமிடத்தில் லட்சக் கணக்கானவர்களிடம் சென்று சேரும் இந்த நக்சல் எதிர்ப்பு வெறியை சாமர்த்தியமாக செய்கிறது உளவுத்துறை.

புரட்சியாளர்களின் போராட்டங்களையும் அவர்களின் தியாகத்தையும் சுவடில்லாமல் செய்யும் ஒரு விஷயமாகவே இதைக் கருத முடியும்.மொத்தமாகப் புழுத்து நாறிக்கொண்டிருக்கும் இச்சமூகத்தை மாற்றமுயலும் நக்சல்பாரி புரட்சியாளர்களுக்கு இது போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் ஒரு தூசு என்ற போதிலும், இது போன்ற கழிசடைப் படங்களைப் பார்த்து இவர்களைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதே இக்கட்டுரையின் முதல் நோக்கம்,இப்படத்தை எடுத்தவர்களை அம்பலப்படுத்துவதும் மற்றொரு நோக்கம்.

ஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.

SIMPLY THIS FILM IS A CONSCIOUSLY FABRICATED ANTI-NAXAL PROPAGANDA
KO – GO TO DUST BIN

கம்யூனிசம் எனும் பட்டறையில் வார்த்தெடுக்கப்பட்ட இரும்புப் பெண்மணி – அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை

Posted in அலெக்சான்ட்ரா, கம்யூனிசமும் பெண்களும், கீழைக்காற்று, புத்தக அறிமுகம் with tags , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிசமும் குடும்பமும் என்ற நூலைப் பற்றியான அறிமுகம் செய்யலாம் என்று நினைத்திருக்கையில் குருத்து தன் வலைப்பதிவில் பதிந்துவிட்டார்.

நூலறிமுகத்திற்கு கீழேயுள்ள படத்தைச் சொடுக்கவும்.

இந்நூலை எழுதிய தோழர் அலெக்சான்ட்ரா பற்றிய சில குறிப்புகள்.

அலெக்ஸான்ட்ரா கொல்லொன்டை என்றழைக்கப்படுகின்ற அலெக்ஸான்ட்ரா மிகைலோவ்னா டெமன்டோவிச் கொல்லொன்டை 31-03-1872 அன்று ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் ஜார் மன்னருக்கு சேவை புரியும் ஒரு மேட்டுக்குடி குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலேயே பல மொழிப்புலமை பெற்ற இவர் தன் பத்தொன்பதாவது வயதில் விளாடிமிர் என்ற இராணுவ வீரரைத் திருமணம் செய்தார், விரைவிலேயே அது ஒரு அடிமை வாழ்க்கை என்பதை உணர்ந்த அலெக்ஸான்ட்ரா தன்னுடைய திருமண வாழ்வை முறித்தார். 1894 களில் ரஷ்ய தொழிற்சாலைகளில் தொழிலாளிகளின் அவல வாழ்நிலையைக் கண்ட அவர், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் உள்ள தொழிலாளர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுப்பதில் இருந்து தன் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பிற்பாடு மார்க்சிய சித்தாந்தத்தில் முழு ஈடுபாடு கொண்டதன் காரணமாக சமூகக் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.

ரஷ்யாவில் ஜாரிய அடக்குமுறையினால் தவித்த ஃபின்லாந்து மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்த இவர் ’ஃபின்லாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை’ என்ற புத்தகத்தை எழுதினார். அதன் நீட்சியாக ரஷ்ய தொழிற்சாலைகளில் உள்ள பெண் தொழிலாளிகளின் உரிமைக்காகவும், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடினார். 1914 வரை மென்ஷ்விக் கட்சியில் இருந்தார், அதன் பிறகு 1915 ல் போல்ஷ்விக் கட்சியில் இணைந்த இவர் அன்றைய ரஷ்ய சோஷலிசக் கட்சியின் மிகப் பெரிய புரட்சியாளர் மற்றும் பெண் விடுதலைப் போராளியாக தன்னை அர்பணித்துக் கொண்டார். 1917 களில் ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சியின் (போல்ஷ்விக்) முதல் பெண் மத்தியக்கமிட்டி உறுப்பினராகவும், அக்டோபர் புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையில் ஏற்பட்ட சோஷலிச அரசின் சமூக நலத்துறை கமிசாராகவும் இருந்தவர். இக்காலகட்டத்தில் (1920) இவர் எழுதிய முக்கியமான நூல்தான் ‘ கம்யூனிசமும் குடும்பமும் – உற்பத்தியில் பெண்களின் பங்கும் குடும்பத்தில் அதன் தாக்கமும் ‘, இது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏடுகளிலும் (ப்ராவ்தா) இவர் தனது புரட்சிகர எழுத்துக்களைக் கொண்டு சென்றார்.

பிறகு ரஷ்யாவில் தொழிற்சங்கங்களை அணுகுவதில் லெனினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அலெக்ஸான்டர் ஷ்லியாப்னிகோவுடன் ( மத்தியக்கமிட்டி உறுப்பினர் & தொழிலாளர்களுக்கான கமிசார்) சேர்ந்து போல்ஷ்விக் கட்சியை விமர்சித்து ‘உழைப்பாளிகளின் கண்டனம்’ என்ற துண்டுப்பிரசுரத்தை வினியோகித்தார். 1922 ல் கட்சிக்குள் குழுவாதம் / பிரிவினைவாதம் இருந்தால் புரட்சியை சாதிக்க முடியாது என்ற காரணத்தைக் கூறி அவரைக் கட்சியில் இருந்து நீக்கினார் லெனின், ஆயினும் ஸ்டாலின் காலகட்டங்களில், நார்வே (1923-1925 & 1927-1930), மெக்சிகோ (1925-1927), ஸ்வீடன் (1930-1945) போன்ற நாடுகளுக்கு நல்லெண்ணத்தூதுவராக நியமிக்கப்பட்டார். தன் கருத்துக்களை மிகவும் துணிச்சலாக வைக்கும் தைரியம் கொண்டவராதலால் ஒளிவுமறைவின்றி செயல்பட்டார், ஸ்டாலினால் 1934 – 1939 காலகட்டங்களில், ஆரம்பத்தில் இருந்த பல மத்தியக் கமிட்டி உறுப்பினர்களும் துரோகிகளாகக் கண்டறியப் பட்டு களையெடுக்கப்பட்ட சமயத்தில் கூட இவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,. கடைசியாக 1945 ல் ஸ்வீடனில் நல்லெண்ணத் தூதராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரஷ்யாவிற்கே வந்து குடியேறினார், உடல் நலக் குறைவினால் 9-03-1952 ல் இறந்தார். உலக சரித்திரத்தில் வெளிநாடுகளுக்கு தூதுவராக செயல்பட்ட முதல் பெண் என்ற பெருமைக்குறியவர்.

ரஷ்யா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் பெண்களுக்காக குரல் கொடுத்த அலெக்ஸான்ட்ராவின் அன்றைய எழுத்துக்கள், இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் பெற வேண்டிய சமூக,அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை நினைவுப்படுத்துகிறது, அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் நமது கடமையையும் உரத்துக் கூறுகின்றது.

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!! அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா !!!

Posted in கிறுக்கியது, கீதையின் மறுபக்கம், பகவத் கீதை, பீத்துணி, புத்தக சந்தை, வாழ்வியல் சிந்தனை, வீரமணி, SOCIAL ISSUES with tags , , , , , , , , , on ஜனவரி 12, 2011 by குட்டகொழப்பி

இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!!
அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா…….

(குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கம் யார் மனசையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல, நோகடித்திருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை, யார் நொந்துபோவார்கள் என்பதும் தெரிந்ததே !!!)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இருக்கிற மீனாக்ஷி புத்தகக் கடைக்கு வெளியே 1000 ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை வெறும் 120 க்கு விற்கப்படும் என ஒரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது, சரி மலிவு விலைப் பதிப்பாக இருக்கும் என நினைத்து உள்ளே சென்று அதைப் பார்த்தால் ஆச்சரியம்…..ஆனால் உண்மை !! உள்ளே நூலகப் பதிப்புதான் (ஒரிஜினல் ப்ரிண்ட்) இருந்தது. அனைவரும் பகவத் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்னத்துடன் தான் இவ்விலைக்கு விற்பதாக விற்பனையாளர்/உரிமையாளர் கூறினார். உன் நல்லெண்ணம் எனக்குத்தெரியாதா என நினைத்துக் கொண்டே உள்ளே பக்கங்களைப் பார்க்கலானேன்.கிட்டதட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகம் தரமானதாக, தடிமனான அட்டையில் பைண்டிங் செய்யப் பட்டிருந்தது.1000 ரூபாய் வொர்த் இல்லாவிட்டால் கூட குறைந்த பட்சம் 750 ரூபாயாவது இருக்கும். ஆங்காங்கே கிருஷ்ணனின் அவதாரங்கள்,போர்க்களத்தில் அறிவுரை சொல்லும் காட்சிகள், கடவுளர்கள் அருள்பாலிக்கும் காட்சிகள் எனப் பல வண்ணப்படங்களுடன் வேறு இருந்தது. எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ என ரஜினி சொல்ற மாதிரி, நாலு நாலா மனுஷன் வாழ்வப் பிரிச்சுகோனு கீதைல சொல்லுது அதாவது பிறப்பு, மூப்பு, நோய் படுதல் கடைசியாக இறப்பு…….முடியலடா சாமி…..

கூடவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது என்று வேறு இருக்கிறது, கங்கை தன்னைத் தேடி வருபவர்களை மட்டும் தான் முக்தி பெற வைக்குமாம், ஆனால் கீதையோ ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அனைவரையும் முக்தி பெற வைக்கிறதாம்…..அது போல இது காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்ததாம், காயத்ரி ஜெபிப்பவனை மட்டும் தான் முக்தியடைய வைக்குமாம், கீதை படிப்பவர்களை மட்டுமல்லாது மற்றவர்களும் வீடு பேறு அடைய வழிவகை செய்யுமாம். இப்படியிருக்க நமக்கு அவன் முக்தி தருவானா?? விடு பேறு தருவானா ……அட வீடுதான் தருவானா……ஹ்ம்ம்ம்ம்ம்.

சரி மேட்டருக்கு வறேன்…..புத்தகத்தைப் பார்த்ததும் வியந்துதான் போனேன்.
இவ்ளோ விலைக்கு எப்படிக் கட்டுப்படியாகும்னு தெரியல. என்னுடன் வந்திருந்த நண்பர் வாங்கலாமா வேண்டாமா என பயங்கரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இதை உணர்ந்த நான் “சும்மா வாங்குங்க, படிக்கலனா கூட பழைய புத்தகக் கடைல போட்டுடலாம், இதை விட அதிகமாக் கிடைக்கும் ” என வலியுறுத்தினேன். சிரித்துக் கொண்டே” நீங்க சொல்றதும் சரிதான், ஆனா நான் அதுக்காக மட்டும் வாங்கல, இவனுங்க நம்ம மக்கள எப்படில்லாம் ஏமாத்துறானுங்கன்னும் தெரிஞ்சுக்கலாம், பல நேரங்கல்ல கீதையைப் பத்தி விமர்சிக்கிற நேரம் வருது, அதுக்கு கூட நாம படிக்கலாம் “ என்று கூறினார். நானும் அவரும் தலா ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டோம்.

அப்படியே நடந்து சென்று கொண்டுருந்தோம் நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்தார், கையில் வைத்திருந்த கீதையைப் பார்த்து, “ ஏன் அந்தப் புத்தகத்தை வாங்கி காசை வீணாக்குறீங்க ” என சற்றே கோபத்துடன் வினவினார், மேற்படி நான் வாங்கியதன் சூட்சமத்தை அவரிடம் சொல்ல “அட நல்ல ஐடியாதாங்க! என் வீட்ல கூட அடிக்கடி தண்ணிப் ப்ரச்சினை வருது….. என் கொழந்தைக்கு தொடைக்க துணி உபயோகிச்சு கட்டுப்படியாகல, துணியாவது மிச்சமாகும்ல……நெருக்கடி நேரத்துல நாங்க கூட உபயோகிச்சுக்கலாம் ” என சீரியசாக சொல்ல கூடியிருந்த அனைவரும் பயங்கரமாகச் சிரித்துப் போனோம்.

சிறிது நேரம் கழித்து தி.க.வின் பெரியார் புத்தக நிலையத்திற்குச் சென்றோம் படிக்க உபயோகமுள்ளவை இங்கு கிடைக்கும் என நினைத்து புத்தகங்களைப் புரட்டினால், புத்தகங்களின் விலை விண்ணை முட்டியது. புத்தகங்களின் எழுத்தைப் பெரிதாக்கி, பக்கங்களையும் அதிகரித்து அட்டைப்போட்டு மறுபதிப்பாக வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக புத்தகங்கள் தீர்ந்து விட்டால் தான்(அல்லது குறைவாக இருந்தால்) மறு பதிப்பு வரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கோ இரண்டு பதிப்புகளும் அருகருகில் வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக தொழிலதிபர், கல்வி நிறுவனர், தஞ்சையின் கல்வித் தந்தை, வாழ்வியல் சிந்தனையாளர் எனப் பல பட்டங்களைத் தாங்கியுள்ள முன்னாள் நாத்திகர் ??? ணிமரவீ (சாரி – பேர் சொல்ல விருப்பமில்லீங்க) எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை கூறலாம்.அதன் விலை 200 ரூபாய் (கீதை 120 ரூபாய்). பல புத்தகங்களின் விலையும் அப்படியே. இவ்வளவு அதிகமாகப் பெரியாரின் கருத்துகள் சோரம் போவதை எண்ணி வருந்தினேன்.

வேறு ஏதாவது புத்தகங்கள் கிடைக்கிறதா என நோட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் “ஏங்க பகவத்கீதை மாதிரி இன்னுமொரு புத்தகத்தை காமிக்கிறேன், இங்க வாங்க ” என நண்பர் கூறினார். என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே பார்த்தால் அது ணிமரவீயின் வாழ்வியல் சிந்தனை(1-8). ஏற்கனவே அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பார்க்கும் பேறை அப்பொழுதுதான் பெற்றேன்.ஒரு புத்தகம் தான் எழுதிருக்காருன்னு பாத்தா கிட்டதட்ட 8 பகுதியாம். “அட இவ்ளோ பணம் கொடுத்து ஒங்க கொழந்த பீத்தொடைக்கனுமா, அதுக்கு இன்னொரு பகவத் கீதை வாங்கிடுங்கன்னு அறிவுறுத்தினேன் ” நாங்க தான் இப்படி பகவத்கீதை வாங்கினோம்னு பாத்தா, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னும் பிறக்காத தன் குழந்தைக்காக கீதைகள் வாங்கியிருப்பதாகக் கூறினார். அட நெசமாத்தானுங்க…………………

சமகாலங்களில் இந்து மதம் எந்த அளவிற்கு தன் விஷக்கொடுக்குகளை வளர்த்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சில விசேஷ நாட்களில் மட்டுமே கூடும் கூட்டம், கடந்த சில ஆண்டுகளாக எல்லா நாட்களிலும் கூடுகின்றது. அஷ்டமி, நவமி, கிருத்திகை, பாட்டிமா, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோவில்களில் மிகவும் அதிகமான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது, அஷ்டயத்திருதியை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை, அன்று கோவில்களில் மட்டுமல்லாது நகைக்கடைகளிலும் அதிகமான கூட்டத்தை காண முடிகிறது, எப்படி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளை வைத்துக் கொண்டாடுகிறார்களோ (கக்கூஸ் போகும் தினம் என வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) அது போல இவர்களும் எல்லா நாட்களையும் ஏதாவது சொல்லி புனித நாளாக்கிவிடுகிறார்கள். (நெசமாவே உக்காந்து யோசிப்பாங்க போல).

பார்ப்பனர்கள் இந்துதுத்வாவைப் பரப்புவதற்கு எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன புத்தக்கக் கடை ஒன்று சிறிய உதாரணம் தான், மேலும் பல இந்துப் பண்டிகைகளின் பொழுது இவர்களின் சேவைப்பிரிவான சேவா பாரதி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பல போட்டிகளை வைப்பது, குழந்தைகளுக்கு இந்து வெறியை ஊட்டக்கூடிய தலைப்புகளில் பாட்டு, நடனம் மற்றும் பேச்சுப் போட்டிகளை வைத்து அவர்களை தன் வசப்படுத்துவது போன்ற விஷம வேலைகளைச் செய்கிறது. இப்படி அசுர (இதுல மட்டும் எங்க வேகம் வேணுமாக்கும்) வேகத்தில் செயல்பட்டு இந்துமதத்தின் இருப்பையும், பரப்புதலையும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் இந்தாளு பன்றது (அதாங்க ணிமரவீ ) கடுப்புகளைக் கெளப்புது யுவர் ஆனர். எங்கெங்க எல்லாம் கல்லா கட்டணுமோ எல்லாத்தலையும் கட்டியாச்சு, கடைசியில மிச்சமிருக்கிற அரவிந்தர், அன்னை,ஓஷோ, ஜக்கி வாசுதேவன், மாதா அமிதானந்தமாயி, நித்யானந்தன், யோகி போன்ற பல ஆன்மீகவாதிகளிடமும் தன் திறமையைக் காட்ட வேணாமா அதான் வாழ்வியல் சிந்தனைகள் எழுதிட்டு இருக்காரு (இதுவரை எட்டு தொகுதிகள் என நினைக்கிறேன்- இன்னும் எத்தனையோ??). இப்படி தன் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்ட்தோ அல்லது இருக்கிறதோ?? குறைந்தபட்சம் அதற்காகவாவது செயல்பட்டால் போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மானமிகு ணிமரவீக்கு அது இருந்தாதான் எப்பவோ செஞ்சிருப்பரே!

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல் இல்லையேல் சாதல்!

Posted in அடிடாஸ், உட்லான்ஸ், எலிக்கறி, கடன், கிறுக்கியது, சந்தை, தனி நபர் நுகர்வு, நச்சுக் கிழங்குகள், நயவஞ்சக விளம்பரங்கள், நுகர்தல், பகுக்கப்படாதது, மறுகாலணி, மாயை, ரீபொக், ரோலக்ஸ், வாங்கும் திறன், ஹார்லி டேவிட்சன், GATT, SOCIAL ISSUES with tags , , , , on ஜனவரி 6, 2011 by குட்டகொழப்பி

நுகர்தலே இன்பம், நுகர்தலே பெருமை, நுகர்தலே இம்மை, நுகர்தலே மறுமை – நுகர்தல்! நுகர்தல்! நுகர்தல்!
நுகர்தல் இல்லையேல் சாதல்!

நாய்களுக்கு உணவு வகைகளை உற்பத்தி செய்யும் பெடிக்ரீக்கு நாய்கள் மீது உண்மையான அக்கறையா என்ன?
தனி நபர் நுகர்வு என்பது ஒரு வெறி பிடித்த நுகர்வாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொல்லவே இது போன்ற சொல்லாடல்களை நாம் உபயோகிக்க வேண்டியுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கு எது நன்றாக இருக்கும் என்பதை அப்பொருளின் உபயோக விளைவைப் பார்த்து தெரிவு செய்யும் நிலையில் இருந்து, விளம்பரங்களில் போடுவதையெல்லாம் வாங்க வேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் மாறி விட்டனர் என்பதனாலேயே இதை ஒரு வெறி என்று சொல்லுகிறோம்.

இந்தியாவில் இத்தகைய நுகர்வு சந்தைகள், அனைத்து மக்களையும் கவரும் விதமாக மாறி வருவதற்கு ஊடகங்கள் செய்யும் நயவஞ்சக விளம்பரங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன, சமீப காலங்களில் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளின் பண்பலை நிகழ்ச்சிகளிலும் இது போன்ற விஷம விளம்பரங்களின் ஆதிக்கம் என்பது நடுத்தர வர்க்க மக்கள் மட்டும் அல்லாமல் குடிசை வீடுகளையும் ஆட்டிவைக்கத் தொடங்கிவிட்டது. வீட்டுக் கடன் கொடுக்கும் வங்கி ஒன்று ”கடன் வாங்குங்கள் பெருமை கொள்ளுங்கள்” என்று விளம்பரம் செய்கிறது. மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவையை மீறி அதிகமாக கடன் வாங்குவதும், திருப்பி அடைக்கும் திறன் இல்லாவிட்டால் கூட கடன் வாங்குவது என்பது வருத்தப்படக் கூடிய ஒன்றல்ல என்பது போன்ற மாயையை இத்தகைய விளம்பரங்கள் உருவாக்குகிறது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் என்பதெல்லாம் போய் நிச்சயமாகப் பரிசு உண்டு!, இங்கு வாங்கினால் உங்கள் பணத்தை சேமிக்கலாம்! போன்ற விளம்பரங்கள் ஏழைப் பாழைகளை வசீகரிக்கும் சொற்களாகிவிட்டன. இது ஏதோ நம் மீதான கரிசனத்தில் அல்ல, அவனது பொருளை வாங்க வைத்து மேலும் மேலும் பொருள் சேர்ப்பதற்கான ஆசைகளைத் தூண்டுவதற்கே என்பதை மக்கள் உணர்வதில்லை. இது மட்டுமல்லாமல் நேர்த்தியான, கவர்ச்சியான பேக்கிங்குகள் கொண்டு விளம்பரப்படுத்தப்படும் பொருட்களே சுத்தமாகவும், உடம்பிற்கு தீங்கு விளைவிக்காமலும் இருக்கும் என்று அவர்களை அறியாமலேயே மனதில் பதிய வைக்கப்படுகின்றன.

கோக், பெப்சி போன்ற மேல்நாட்டு குளிர்பாண நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்களை வைத்து எடுக்கும் மிகப் பிரம்மாண்டமான விளம்பரங்கள் மூலம், இந்தியா முழுக்க டீலர்கள் அமைக்கப்படுகிறார்கள். மேலும் சிறு வியாபாரிகளைக் கவருவதற்கு ஐஸ் பாக்ஸ், டீ சர்ட், பள பளக்கும் விளம்பரச் சுவரொட்டிகள் போன்ற ஜிகினாப் பொருள்களை இலவசமாக வழங்குவதால் கவரப்பட்டு கிராமங்களின் சாதாரணமான குக்கிராமங்களில் கூட இவற்றை வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சோப்பு, பேஸ்ட் முதல் நாப்கின்கள் வரை டி.வி க்களில் வரும் விளம்பரங்களை வைத்து வாங்கும் நிலையே இன்று கிராமங்களில் அதிகரித்துள்ளது.

தங்கள் தேவைக்கு அதிகமாக சம்பாதிக்கும் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும் இதற்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். முக்கியமாக இளைய தலைமுறையினரைக் குறிவைத்து தயாரிக்கப்படுகின்ற இத்தகைய விளம்பரங்கள், காலணிகள் என்றால் உட்லான்ஸ், ரீபொக் அல்லது அடிடாஸ், ஆடைகள் என்றால் ஏரோ, ஆலன் சோலி, லூயி ஃபிலிப், சோடியாக், கலர் ப்ளஸ் அல்லது க்ரொகடைல், கைக்கடிகாரங்கள் என்றால் ரோலக்ஸ், ஒமெகா அல்லது ரேடோ போன்ற தயாரிப்புகள் தான் தரமானவை என்று அவர்களை அறியாமல் மனதில் புகுத்தப்படுகின்றது. சந்தையில் புதிது புதிதாக அறிமுகப்படுத்துகிற இரு சக்கர வாகனங்களுக்கான கவர்ச்சிகர விளம்பரங்கள், தேவைக்குதான் வாகனங்கள் என்பதிலிருந்து பந்தா காட்டவும், படாடோபத்திற்குமான ஒரு சின்னமாக மாற்றப்பட்டுவிட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் போன்ற வாகனங்களின் அறிமுகம் இதற்கு சிறந்த உதாரணம். நாற்பது முதல் ஐம்பதாயிரம் வரையிலான இரு சக்கர வாகனங்கள் போய் ஏழு முதல் ஐம்பது லட்சம் வரையிலான ஹார்லி டேவிட்சன் வகையிறா வாகனங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

மேலும் அட்சய த்ரிதியை அன்று ந‌கை வாங்கினால் ந‌கை சேர்ந்து கொண்டிருக்கும் என்ற‌ மூட‌ப்ப‌ழ‌க்க‌த்தை, பார்ப்பனர்கள் மூல‌மாக‌ ரேடியோவிலும், தொலைக்காட்சியிலும் கூற‌வைத்து ம‌க்க‌ளை மேலும் வாங்குவ‌த‌ற்கான‌ ஆசையை தூண்டுவ‌தே இவ‌ர்க‌ளின் முக்கிய‌ இல‌க்காக‌ உள்ள‌து. இதன் மூல‌ம் ம‌க்க‌ளை ஓட்டாண்டியாக்குவ‌தோடு, இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் மூல‌ம் ஒரு பொருளை வாங்குவ‌தற்காக‌ கொலையும் செய்ய‌லாம் என்ப‌தைப் போன்ற மனோபாவத்தை உருவாக்குகிறது..

இது போன்று தேவைக்கு அதிகமாக‌ வாங்க‌வைத்து க‌ட‌னாளியாக்குவ‌தற்கே இத்த‌கைய‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. எதுவெல்லாம் குடும்ப‌த்தை, இச்சமூகத்தை சீர‌ழிக்க‌க் கூடியதோ அதையெல்லாம் நியாய‌ப்ப‌டுத்துவதற்காக‌வே இன்றைய‌‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் காற்றை விட வேக‌மாக‌ச் சென்றுகொண்டிருக்கிற‌து. நுகர்பவனை வேறு எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஆட்டு மந்தைகளாக மாற்றி தாங்கள் நினைத்தவற்றை சாதித்துக்கொள்ளும் வேலையை இத்தகைய விளம்பரங்கள் கச்சிதமாகச் செய்து முடிக்கின்றன. மக்கள் தாங்கள் ஒரு மாதம் சம்பாதிப்பதை பெரும்பாலும் நுகர்வதற்கே அதிகபட்சமாக செலவிடும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் கடன் வாங்கி அடைக்க முடியாமல் திணறுவதும், குடும்பத்தில் தேவையில்லாத சண்டைகள், குழப்பம் நிலவவும் முடிவில் அது ஒட்டுமொத்த குடும்பத்தையே பிரித்துவிடும் நிலைக்கோ அல்லது தற்கொலைக்கு தூண்டும் விதத்திலோ கொண்டு போய் விடுகிறது.

ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் போடுகிற வாசணை திரவியங்கள் அல்லது அவரால் விளம்பரப் படுத்தப்படுகிற பொருட்கள், வெளிநாடுகளில் என்று சந்தை படுத்தப் படுகின்றதோ அதே தேதியில், அதே நேரத்தில் இந்தியாவிலும் அறிமுகப் படுத்தப்படுகின்றது, அது போல ஹாரி பார்ட்டர் புத்தகங்களும் உலகம் முழுவதும் ஒரே நாளில் அறிமுகப்படுத்தப்படுவதும் அப்புத்தகங்கள் அவர்களால் படிக்கப் படுகிறதோ இல்லையோ முதல் நாளே வாங்கிவிடுவது போன்றவை, மிகப்பெரிய கௌராமாகப் பார்க்கப்பட்டு, பெருமிதம் கொள்ளும் மனோபாவமும் மேல்தட்டு வர்க்கத்திற்கு ஏற்படுகிறது. இதன் மூலம் உலகளவில் புகழ் பெற்ற பொருள்களை வெறி பிடித்து நுகர்வதால் இந்த சமூகம் அவர்களை மதிப்புடன் பார்ப்பதாகவும் நினைக்கிறார்கள்

1990 கள் வரையில் இந்தியாவில் இருந்த மொத்த ஷாப்பிங் மால்கள் எனப்படுகிற மிகப்பரிய வணிக வளாகங்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் அனால் இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்கு திறந்துவிடப்பட்ட பிறகு அவற்றின் வளர்ச்சி கற்பணை செய்ய முடியாத நுகர்வுவெறிக்கு இட்டுச் சென்றுள்ளது. மேலும், இவ்வகை நுகர்வு வெறி நமது உண்ணும் முறையிலும் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இத்தகைய மால்களில் உள்ள மெக் டொனால்ட், கெ.எஃப்.சி, சான்ஸ் கிட்சென், வேன்க்ஸ் கிட்சென், பீசா ஹட், பதான்கோட், காஃபி டே போன்ற மேல்தட்டு உணவகங்கள் வானொலி, தொலைகாட்சிகளில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு அவற்றை உண்ணும் வெறியை ஏற்படுத்துகிறது.

தனி நபர் நுகர்வு வெறிக்கு மூலம், இந்திய அரசால் 1991ல் கொண்டு வரப்பட்ட தனியார்மய, தாராளமய உலகமய சித்தாந்தத்தைக் கொண்ட காட் (GATT) ஒப்பந்தமே ஆகும். உலகிலேயே மிகப் பெரிய சந்தை, எதை சொன்னாலும் நம்பக் கூடிய அடிமை புத்தி கொண்ட மக்கள், வெளி நாட்டுப் பொருள்கள் என்றால் தரம் அதிகமாக இருக்கும் என்ற கற்பிதங்கள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் காலாவதியான தொழில் நுட்பத்தையும் தொழில்நுட்ப சாதனங்களையும் இன்னபிற கண்ட கண்ட கழிசடைகளைக் கூட மூன்றாம் உலக நாடுகளில் விற்று காசாக்கலாம் என்ற ஏகாதிபத்தியக் கண்ணோட்டம் போன்றவை தங்கள் சமஸ்தான சந்தைகளை அமைக்க சாதக அம்சங்களாக மேலை நாட்டு நிறுவனங்கள் கருதுகின்றன. இது போன்ற தனி நபர் நுகர்வை சமூகத்தில் ஒரு கவுரவமான செயலாகவும் அதிகமாக நுகர்பவனை மதிப்பு மிக்கவனாகவும் இச்சமூகமும் முதலாளித்துவ உலகமும் காட்டமுனைகிறது. அதிகமாக நுகர்தலே நிம்மதி, அதிகமாக நுகர்வதே பெருமையான விஷயம், புதிது புதிதாக வித விதமாக நுகர்தல், போன்றவை நுகர்தலை போதை வஸ்துவாகவே மாற்றி ஒருவித மயக்க நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.

இது ஏதோ மிகப் பெரிய சமுதாயப் பொருளாதார புரட்சி என்றும், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டது, யாரும் முன்னைப் போல பரம ஏழைகளாக இல்லை என்றும் சொல்பவர்கள் ஒன்றை உணர வேண்டும் இது போன்ற சந்தைகள் யாருக்கானதாக இருக்கிறது, யார் நுகர்வதற்காக வந்துள்ளது ? இது தினம் தினம் பட்டினியால் செத்து மடியும், நோஞ்சான்களாக இருக்கும் இந்தியக் குழந்தைகளின் பட்டினியை போக்குவதாக இருக்கிறதா? எலிக்கறி, நச்சுக் கிழங்குகள் தின்று தங்கள் பசியை ஆற்றிக்கொள்ளும் விவசாயிகளின் பட்டினியினைப் போக்குவதாக உள்ளதா? மக்கள் தொகையில் 30 கோடி பேர் தினமும் உறங்கச் செல்லும் முன் வயிற்றில் ஈரத்துணி கட்டிக் கொள்ளும் ஏழைப் பாழைகளின் பசியை போக்குவதாக உள்ளதா? இல்லையே, அவர்கள் ஏன் இது போன்ற நிலைக்குத் தள்ளப்படுள்ளனர், வாங்கும் திறனே இல்லாத நிலைக்கு அவர்கள் மாறியது எதனால், மாற்றியது எது? ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான வித்தியாசம் மிக அதிகமாகிவிட்ட நிலையில், இவை எல்லாவற்றிற்கும் காரணம் அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற நாட்டை மறுகாலணியாக்கும் கொள்கைகள் தாம் என்பது உறுதி.
.

Culture Unplugged Video

Posted in பகுக்கப்படாதது on ஓகஸ்ட் 30, 2010 by குட்டகொழப்பி

கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!

Posted in டௌ, புரட்சி, போபால் படுகொலை, முற்றுகைப் போராட்டம் on ஓகஸ்ட் 13, 2010 by குட்டகொழப்பி

Continue reading

போபால் : நீதி வேண்டுமா?.. நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை….ஆகஸ்டு 15 கிண்டியில் டௌ கெமிக்கல்ஸ் முற்றுகை ! அனைவரும் வருக !!

Posted in பகுக்கப்படாதது with tags , , , on ஓகஸ்ட் 11, 2010 by குட்டகொழப்பி

போபால் – காலம் கடந்த அநீதி

அன்பார்ந்த உழைக்கும் மக்களே ,

போபால் நச்சுவாயுப் படுகொலையை விபத்தாகச் சித்தரித்து குற்றவாளிகளை ஒரு நாள் கூட சிறைக்கு அனுப்பாமல் பிணையில் விடுவித்திருக்கிறது போபால் நீதிமன்றம். முதன்மைக் குற்றவாளியான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது அமெரிக்க அரசு. 23,000 இந்திய மக்களை படுகொலை செய்து , 5,00,000 க்கும் மேற்பட்டோரை ஊனமாக்கியிருக்கும் அந்தப் பயங்கரவாதியை ஒரே ஒரு நாள் கூட கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்கு கூட விரும்பாத மன்மோகன் சிங் அரசு, மக்களுக்கு நிவாரணம் தருவதாகவும், மீண்டும் நீதி விசாரணை கோரப் போவதாகவும் நம்மிடம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.

1984, டிசம்பர் 2ம் தேதி நள்ளிரவில் யூனியன் கார்பைடு ஆலையில் நடந்த நச்சுவாயுக் கசிவு எதிர்பாராமல் நடந்த விபத்தல்ல. அமெரிக்க நிறுவனம் தெரிந்தே செய்த படுகொலை. ஆபத்தான இந்த உற்பத்தியை அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு தள்ளி விட்டது குற்றம். மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயுவிலிருந்து பூச்சிக் கொல்லி தயாரிக்கும் ஆலையை குடியிருப்பு பகுதியில் அமைத்தது குற்றம்.

அதே ஆலையில் பல விபத்துக்கள் நடந்த பின்னரும் இலாபத்தை கூட்டுவதற்காக நச்சுவாயுக் கிடங்கின் பாதுகாப்புச் செலவுகளை குறைத்தது குற்றம்.செத்துக் கொண்டிருந்த மக்களுக்கு மாற்று மருந்து கொடுத்து காப்பாற்ற முயன்ற மருத்துவர்களிடம் கூட சயனைடு வாயுவின் பெயரைக் கூறாமல் ஏமாற்றி, பல்லாயிரம் மக்களைத் துடித்துச் சாக விட்டது குற்றம். பூச்சிக் கொல்லி த்யாரிப்பதாக கூறிக் கொண்டு, இரகசியமாக இரசாயன ஆயுதங்களைத் தயாரித்தது தான் மேற்கூறிய குற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான கொலைக்குற்றம்.
தேடப்படும் குற்றவாளி ஆண்டர்சன்

குற்றவாளி யூனியன் கார்பைடு மட்டுமல்ல; ஆபத்தான இந்த ஆலைக்குத் தெரிந்தே உரிமம் வழங்கியவர் இந்திராகாந்தி. கைது செய்யப்பட்ட ஆண்டர்சனை விடுவித்து மன்னிப்பு கேட்டு, அரசு விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைத்தவர் அன்றைய பிரதமர் இராஜீவ் காந்தி. ஒரு இந்திய உயிரின் விலை 12,414 ரூபாய் என்று 1989 இல் கார்பைடு நிறுவனத்துடன் கட்டைப் பஞ்சாயத்து பேசி முடித்தது இராஜீவ் அரசாங்கம்.

இந்தக் குற்றத்தை சாலை விபத்து போன்ற சாதாரணக் குற்றமாக குறைத்தது உச்ச நீதி மன்றம். வழக்கை சீர்குலைத்து குற்றவாளி ஆண்டர்சனைத் தப்பவைக்க முயன்றது சி.பி.ஐ. காங்கிரசு அரசின் எல்லா சதிகளுக்கும் உடந்தையாய் இருந்தது, அதன் பின் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் அரசு. இந்த குற்றவாளிகள் அனைவரும் எதுவுமே தெரியாதவர்கள் போல் நாடகமாடுகிறார்கள்.

26 ஆண்டுகளாக காத்திருந்த போபால் மக்களுக்கு இன்று இழைக்கப்பட்டிருப்பது அன்றைய படுகொலையைக் காட்டிலும் கொடிய அநீதி. இந்த அநீதி இந்தியாவின் சட்டமாகவே மாறவிருக்கிறது. “இந்திய அரசு அமெரிக்காவிடம் வாங்கவிருக்கும் அணு உலைகள் வெடித்து நாளை இலட்சக் கணக்கான இந்தியர்கள் செத்தாலும், அதற்காக் அமெரிக்க முதலாளிகளிடம் நட்ட ஈடு கூட கேட்க மாட்டோம்” என்கிறது மன்மோகன் சிங் அரசின் அணுசக்தி மசோதா. தற்போது யூனியன் கார்பைடு நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கும் டௌ கெமிக்கல்ஸ் , அன்று வியட்னாம் மக்களைக் கொல்வதற்கு நாபாம் தீக்குண்டுகளை அமெரிக்காவுக்கு தயாரித்து கொடுத்த நிறுவனம்.

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு இந்தக் கொலைகார நிறுவனத்தை வருந்தி அழைத்துக் கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. “பன்னாட்டு முதலாளிகளின் இலாபத்துக்காக இந்திய மக்களைக் கொல்வதும் மண்ணை விட்டு விரட்டுவதும் நம் தொழில்களை அழிப்பதும் உரிமைகளைப் பறிப்பதும் தான் நீதி: பன்னாட்டு முதலாளிகள் சொல்வது தான் சட்டம்; அவர்கள் கொழுப்பது தான் நாட்டின் முன்னேற்றம்” என்ற இந்திய அரசின் கொள்கையை அம்பலமாக்கியிருக்கிறது போபால் படுகொலை.

காலனியாதிக்கத்தின் கோர முகத்தை அம்பலமாக்கி, பகத்சிங் போன்ற விடுதலை வீரர்களை உருவாக்கியது ஜாலியன் வாலாபாக். இந்திய சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றின் பொய்முகங்களையும், மறுகாலனியாதிக்கத்தின் உண்மை முகத்தையும் உரித்துக் காட்டியிருக்கிறது போபால்.

நீதி வேண்டுமா?.
நக்சல்பாரி புரட்சி ஒன்று தான் பாதை!. இது போபால் படுகொலை நமக்கு கற்பிக்கும் பாடம்.
நீதி வேண்டுமா ?.. புரட்சி ஒன்று தான் பாதை ..
கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
முற்றுகை
ஆகஸ்டு-15, காலை 10.30 மணி,
பேரணி துவங்குமிடம்: காசி தியேட்டர், சென்னை.
பேரணி சேருமிடம், முற்றுகை: டௌ கெமிக்கல்ஸ் அலுவலகம், கிண்டி, சென்னை.

அனைவரும் வருக‌

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னனி

தொடர்பு கொள்ள:

ம.க.இ.க : 94446 48879
பு.ம.இ.மு : 94451 12675
பு.ஜ.தொ.மு : 94448 34519
பெ.வி.மு : 98849 50952
வினவு : 97100 82506
போபால் சிறப்பு வெளியீடு

எங்களுக்காகப் பேசு இல்லையென்றால் நீ மாவோயிஸ்டு !!!

Posted in உள்நாட்டுப் போர், சத்தீஸ்கர், பழங்குடி மக்கள், போலிஸ் அராஜகம், மாவோயிஸ்டு, லால்கர், விமர்சனங்கள், SOCIAL ISSUES with tags , , , , , on ஜூலை 18, 2010 by குட்டகொழப்பி

இந்திய ஆளும் வர்க்கத்தினால் திட்டமிடப்பட்டு நடந்து வருகின்ற காட்டு வேட்டையினால் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாகச் சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தடையற்றஅடக்குமுறை அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ் நிøயை முள்வேலிக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கிணையாக மாற்றியுள்ளது.

அரசின் அடக்கு முறையினால் நிலையற்று நாடோடிகளைப் போல மாறிய அம்மக்கள் காலங்காலமாக பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் ஈட்டி, அம்பு போன்ற சாதாரண ஆயுதங்களை மிகப் பயங்கரமான ஆயுதங்களாகச் சித்தரித்து தீவிரவாதிகளாக அடையாளப் படுத்துகிற அவல நிலையும் இங்கு சர்வ சாதாரணமாகியுள்ளது.இந்தியா முழுக்க போலிசு என்பது அரசின் அடக்குமுறைக் கருவியாக மாறியுள்ள நிலையில் லால்கர், ஒரிஸ்ஸா,சத்தீஸ்கர் போன்ற இடங்களில் இதன் வீரியம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.எந்தவித முகாந்திரமுமின்றி போலிசுக் கும்பலால் கைது செய்யப்படும் அவர்கள் அளவிலாச் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு செத்து மடியும் நிலையும் இங்கு சாதாரணமே.

குறிப்பாக லால்கரில் உள்ள மிட்னாப்பூரில் போலீசுக் கும்பலின் எல்லையற்ற அதிகாரம் அம்மக்களின் அடிப்படை உரிமையையே பறிக்கும் நிலையில் உள்ளது.
பிரக்கடாவில் 2009 டிசம்பரில் நடந்த குண்டு வெடிப்பில் போலிசு வாகனம் மாவோயிஸ்டுகளால் தரைமட்டமாக்கப்பட்டது.குன்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவே உள்ளது சுனில் மஹட்டோ என்ற பழங்குடியினரின் வீடு.தன்னைச் சந்தேகப்படுவார்களோ என பயந்த சுனில் அருகில் இருக்கும் காட்டில் அடைக்கலமடைந்தார்.சுனில் நினைத்தது பொன்றே சந்தேகப்பட்ட போலீஸ் வீட்டில் இருந்த அவரின் மனைவி திவாலி மற்றும் குழந்தைகளையும் சிறையிலடைத்தது.

சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த சுனில் நடந்த செய்தியறிந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத சுனில் மீதோ அரசுக் கெதிராகச் சதிச் செயலில் ஈடுபட்டமை, பயங்கர ஆயுதம் மற்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தமை போன்ற ஏழு குற்றங்களில் திணிக்கப்ட்டு சிறைத்தண்டனை விதிக்கபட்டது. தெற்கு மிட்னாபுரில் உள்ள சிறையில் சுனிலைப் போன்றே கிட்டதட்ட 141 க்கும் மேற்பட்ட பழங்குடி ஆண்களும் பெண்களும் மாவோயிஸ்டுகளெனப் பொய் குற்றம் சுமத்தப் பட்டு அடைக்கப்பட்டனர்.காடுகளின் அருகில் இவர்கள் வீடு இருப்பதாலேயே தாங்கள் மாவோயிஸ்டுகளெனச் சித்தரிக்கபடுவதாக இம்மக்கள் கூறுகின்றனர்.

இந்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாகச் செயல்பட்டு வரும் இந்த அரசு நக்சல் புரட்சியாளர்களை கொன்றொழிப்பதாகக் கூறி தன் மக்கள் மீதே உள் நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இப்பாசிசத்தை அம்பலப் படுத்த வேண்டியது நம் அனைவரின் மிக முக்கியமான கடமையாகும்.