இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!! அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா !!!


இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!!
அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா…….

(குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கம் யார் மனசையும் நோகடிப்பதற்காக எழுதப்பட்டது அல்ல, நோகடித்திருந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை, யார் நொந்துபோவார்கள் என்பதும் தெரிந்ததே !!!)

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இருக்கிற மீனாக்ஷி புத்தகக் கடைக்கு வெளியே 1000 ரூபாய் மதிப்புள்ள பகவத் கீதை வெறும் 120 க்கு விற்கப்படும் என ஒரு அறிவிப்புப் பலகை தொங்கிக் கொண்டிருந்தது, சரி மலிவு விலைப் பதிப்பாக இருக்கும் என நினைத்து உள்ளே சென்று அதைப் பார்த்தால் ஆச்சரியம்…..ஆனால் உண்மை !! உள்ளே நூலகப் பதிப்புதான் (ஒரிஜினல் ப்ரிண்ட்) இருந்தது. அனைவரும் பகவத் கீதையைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற நல்லெண்னத்துடன் தான் இவ்விலைக்கு விற்பதாக விற்பனையாளர்/உரிமையாளர் கூறினார். உன் நல்லெண்ணம் எனக்குத்தெரியாதா என நினைத்துக் கொண்டே உள்ளே பக்கங்களைப் பார்க்கலானேன்.கிட்டதட்ட 1000 பக்கங்களுக்கு மேல் கொண்ட இப்புத்தகம் தரமானதாக, தடிமனான அட்டையில் பைண்டிங் செய்யப் பட்டிருந்தது.1000 ரூபாய் வொர்த் இல்லாவிட்டால் கூட குறைந்த பட்சம் 750 ரூபாயாவது இருக்கும். ஆங்காங்கே கிருஷ்ணனின் அவதாரங்கள்,போர்க்களத்தில் அறிவுரை சொல்லும் காட்சிகள், கடவுளர்கள் அருள்பாலிக்கும் காட்சிகள் எனப் பல வண்ணப்படங்களுடன் வேறு இருந்தது. எட்டு எட்டா மனுஷன் வாழ்வப் பிரிச்சுக்கோ என ரஜினி சொல்ற மாதிரி, நாலு நாலா மனுஷன் வாழ்வப் பிரிச்சுகோனு கீதைல சொல்லுது அதாவது பிறப்பு, மூப்பு, நோய் படுதல் கடைசியாக இறப்பு…….முடியலடா சாமி…..

கூடவே கீதை கங்கையைக் காட்டிலும் சிறந்தது என்று வேறு இருக்கிறது, கங்கை தன்னைத் தேடி வருபவர்களை மட்டும் தான் முக்தி பெற வைக்குமாம், ஆனால் கீதையோ ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று அனைவரையும் முக்தி பெற வைக்கிறதாம்…..அது போல இது காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்ததாம், காயத்ரி ஜெபிப்பவனை மட்டும் தான் முக்தியடைய வைக்குமாம், கீதை படிப்பவர்களை மட்டுமல்லாது மற்றவர்களும் வீடு பேறு அடைய வழிவகை செய்யுமாம். இப்படியிருக்க நமக்கு அவன் முக்தி தருவானா?? விடு பேறு தருவானா ……அட வீடுதான் தருவானா……ஹ்ம்ம்ம்ம்ம்.

சரி மேட்டருக்கு வறேன்…..புத்தகத்தைப் பார்த்ததும் வியந்துதான் போனேன்.
இவ்ளோ விலைக்கு எப்படிக் கட்டுப்படியாகும்னு தெரியல. என்னுடன் வந்திருந்த நண்பர் வாங்கலாமா வேண்டாமா என பயங்கரமாக யோசித்துக்கொண்டிருந்தார். இதை உணர்ந்த நான் “சும்மா வாங்குங்க, படிக்கலனா கூட பழைய புத்தகக் கடைல போட்டுடலாம், இதை விட அதிகமாக் கிடைக்கும் ” என வலியுறுத்தினேன். சிரித்துக் கொண்டே” நீங்க சொல்றதும் சரிதான், ஆனா நான் அதுக்காக மட்டும் வாங்கல, இவனுங்க நம்ம மக்கள எப்படில்லாம் ஏமாத்துறானுங்கன்னும் தெரிஞ்சுக்கலாம், பல நேரங்கல்ல கீதையைப் பத்தி விமர்சிக்கிற நேரம் வருது, அதுக்கு கூட நாம படிக்கலாம் “ என்று கூறினார். நானும் அவரும் தலா ஒரு புத்தகத்தை வாங்கிக்கொண்டோம்.

அப்படியே நடந்து சென்று கொண்டுருந்தோம் நண்பர் ஒருவர் தன் மனைவி குழந்தையுடன் வந்திருந்தார், கையில் வைத்திருந்த கீதையைப் பார்த்து, “ ஏன் அந்தப் புத்தகத்தை வாங்கி காசை வீணாக்குறீங்க ” என சற்றே கோபத்துடன் வினவினார், மேற்படி நான் வாங்கியதன் சூட்சமத்தை அவரிடம் சொல்ல “அட நல்ல ஐடியாதாங்க! என் வீட்ல கூட அடிக்கடி தண்ணிப் ப்ரச்சினை வருது….. என் கொழந்தைக்கு தொடைக்க துணி உபயோகிச்சு கட்டுப்படியாகல, துணியாவது மிச்சமாகும்ல……நெருக்கடி நேரத்துல நாங்க கூட உபயோகிச்சுக்கலாம் ” என சீரியசாக சொல்ல கூடியிருந்த அனைவரும் பயங்கரமாகச் சிரித்துப் போனோம்.

சிறிது நேரம் கழித்து தி.க.வின் பெரியார் புத்தக நிலையத்திற்குச் சென்றோம் படிக்க உபயோகமுள்ளவை இங்கு கிடைக்கும் என நினைத்து புத்தகங்களைப் புரட்டினால், புத்தகங்களின் விலை விண்ணை முட்டியது. புத்தகங்களின் எழுத்தைப் பெரிதாக்கி, பக்கங்களையும் அதிகரித்து அட்டைப்போட்டு மறுபதிப்பாக வெளியிட்டிருந்தார்கள். பொதுவாக புத்தகங்கள் தீர்ந்து விட்டால் தான்(அல்லது குறைவாக இருந்தால்) மறு பதிப்பு வரும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இங்கோ இரண்டு பதிப்புகளும் அருகருகில் வைக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டாக தொழிலதிபர், கல்வி நிறுவனர், தஞ்சையின் கல்வித் தந்தை, வாழ்வியல் சிந்தனையாளர் எனப் பல பட்டங்களைத் தாங்கியுள்ள முன்னாள் நாத்திகர் ??? ணிமரவீ (சாரி – பேர் சொல்ல விருப்பமில்லீங்க) எழுதிய கீதையின் மறுபக்கம் என்ற புத்தகத்தை கூறலாம்.அதன் விலை 200 ரூபாய் (கீதை 120 ரூபாய்). பல புத்தகங்களின் விலையும் அப்படியே. இவ்வளவு அதிகமாகப் பெரியாரின் கருத்துகள் சோரம் போவதை எண்ணி வருந்தினேன்.

வேறு ஏதாவது புத்தகங்கள் கிடைக்கிறதா என நோட்டமிட்டுக்கொண்டிருந்த சமயத்தில் “ஏங்க பகவத்கீதை மாதிரி இன்னுமொரு புத்தகத்தை காமிக்கிறேன், இங்க வாங்க ” என நண்பர் கூறினார். என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே பார்த்தால் அது ணிமரவீயின் வாழ்வியல் சிந்தனை(1-8). ஏற்கனவே அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதைப் பார்க்கும் பேறை அப்பொழுதுதான் பெற்றேன்.ஒரு புத்தகம் தான் எழுதிருக்காருன்னு பாத்தா கிட்டதட்ட 8 பகுதியாம். “அட இவ்ளோ பணம் கொடுத்து ஒங்க கொழந்த பீத்தொடைக்கனுமா, அதுக்கு இன்னொரு பகவத் கீதை வாங்கிடுங்கன்னு அறிவுறுத்தினேன் ” நாங்க தான் இப்படி பகவத்கீதை வாங்கினோம்னு பாத்தா, நண்பர் ஒருவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது, இன்னும் பிறக்காத தன் குழந்தைக்காக கீதைகள் வாங்கியிருப்பதாகக் கூறினார். அட நெசமாத்தானுங்க…………………

சமகாலங்களில் இந்து மதம் எந்த அளவிற்கு தன் விஷக்கொடுக்குகளை வளர்த்திருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே, இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள கோவில்களில் வெள்ளிக்கிழமைகள் மற்றும் சில விசேஷ நாட்களில் மட்டுமே கூடும் கூட்டம், கடந்த சில ஆண்டுகளாக எல்லா நாட்களிலும் கூடுகின்றது. அஷ்டமி, நவமி, கிருத்திகை, பாட்டிமா, அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கோவில்களில் மிகவும் அதிகமான கூட்டத்தைப் பார்க்க முடிகிறது, அஷ்டயத்திருதியை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை, அன்று கோவில்களில் மட்டுமல்லாது நகைக்கடைகளிலும் அதிகமான கூட்டத்தை காண முடிகிறது, எப்படி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொன்றிற்கும் ஒரு நாளை வைத்துக் கொண்டாடுகிறார்களோ (கக்கூஸ் போகும் தினம் என வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை) அது போல இவர்களும் எல்லா நாட்களையும் ஏதாவது சொல்லி புனித நாளாக்கிவிடுகிறார்கள். (நெசமாவே உக்காந்து யோசிப்பாங்க போல).

பார்ப்பனர்கள் இந்துதுத்வாவைப் பரப்புவதற்கு எந்த அளவிற்கு முனைப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன புத்தக்கக் கடை ஒன்று சிறிய உதாரணம் தான், மேலும் பல இந்துப் பண்டிகைகளின் பொழுது இவர்களின் சேவைப்பிரிவான சேவா பாரதி ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு பல போட்டிகளை வைப்பது, குழந்தைகளுக்கு இந்து வெறியை ஊட்டக்கூடிய தலைப்புகளில் பாட்டு, நடனம் மற்றும் பேச்சுப் போட்டிகளை வைத்து அவர்களை தன் வசப்படுத்துவது போன்ற விஷம வேலைகளைச் செய்கிறது. இப்படி அசுர (இதுல மட்டும் எங்க வேகம் வேணுமாக்கும்) வேகத்தில் செயல்பட்டு இந்துமதத்தின் இருப்பையும், பரப்புதலையும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மத்தியில் இந்தாளு பன்றது (அதாங்க ணிமரவீ ) கடுப்புகளைக் கெளப்புது யுவர் ஆனர். எங்கெங்க எல்லாம் கல்லா கட்டணுமோ எல்லாத்தலையும் கட்டியாச்சு, கடைசியில மிச்சமிருக்கிற அரவிந்தர், அன்னை,ஓஷோ, ஜக்கி வாசுதேவன், மாதா அமிதானந்தமாயி, நித்யானந்தன், யோகி போன்ற பல ஆன்மீகவாதிகளிடமும் தன் திறமையைக் காட்ட வேணாமா அதான் வாழ்வியல் சிந்தனைகள் எழுதிட்டு இருக்காரு (இதுவரை எட்டு தொகுதிகள் என நினைக்கிறேன்- இன்னும் எத்தனையோ??). இப்படி தன் கட்சி எதற்காக ஆரம்பிக்கப்பட்ட்தோ அல்லது இருக்கிறதோ?? குறைந்தபட்சம் அதற்காகவாவது செயல்பட்டால் போதும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

மானமிகு ணிமரவீக்கு அது இருந்தாதான் எப்பவோ செஞ்சிருப்பரே!

5 பதில்கள் to “இந்தா வாங்குங்க மலிவு விலை பகவத்கீதை – புத்தகச்சந்தையில் !!! அட கொழந்த பீத்துணியையாவது மிச்சப்படுத்துங்கப்பா !!!”

  1. பதிவு மிகவும் அருமை ,வாழ்த்துக்கள்

  2. குட்டகுழப்பி நீங்க உண்மையிலே நல்லவரு, வல்லவரு, உங்களோட பதிவுகள் சிந்திக்கவைப்பவை பயணம் தொடர வாழ்த்து. பிடுங்கி

தமிழ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி