எங்களுக்காகப் பேசு இல்லையென்றால் நீ மாவோயிஸ்டு !!!
இந்திய ஆளும் வர்க்கத்தினால் திட்டமிடப்பட்டு நடந்து வருகின்ற காட்டு வேட்டையினால் அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. குறிப்பாகச் சமீப காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தடையற்றஅடக்குமுறை அப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ் நிøயை முள்வேலிக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களுக்கிணையாக மாற்றியுள்ளது.
அரசின் அடக்கு முறையினால் நிலையற்று நாடோடிகளைப் போல மாறிய அம்மக்கள் காலங்காலமாக பாதுகாப்பிற்காக வைத்திருக்கும் ஈட்டி, அம்பு போன்ற சாதாரண ஆயுதங்களை மிகப் பயங்கரமான ஆயுதங்களாகச் சித்தரித்து தீவிரவாதிகளாக அடையாளப் படுத்துகிற அவல நிலையும் இங்கு சர்வ சாதாரணமாகியுள்ளது.இந்தியா முழுக்க போலிசு என்பது அரசின் அடக்குமுறைக் கருவியாக மாறியுள்ள நிலையில் லால்கர், ஒரிஸ்ஸா,சத்தீஸ்கர் போன்ற இடங்களில் இதன் வீரியம் மிகப்பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.எந்தவித முகாந்திரமுமின்றி போலிசுக் கும்பலால் கைது செய்யப்படும் அவர்கள் அளவிலாச் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு செத்து மடியும் நிலையும் இங்கு சாதாரணமே.
குறிப்பாக லால்கரில் உள்ள மிட்னாப்பூரில் போலீசுக் கும்பலின் எல்லையற்ற அதிகாரம் அம்மக்களின் அடிப்படை உரிமையையே பறிக்கும் நிலையில் உள்ளது.
பிரக்கடாவில் 2009 டிசம்பரில் நடந்த குண்டு வெடிப்பில் போலிசு வாகனம் மாவோயிஸ்டுகளால் தரைமட்டமாக்கப்பட்டது.குன்டு வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சில மீட்டர் தொலைவே உள்ளது சுனில் மஹட்டோ என்ற பழங்குடியினரின் வீடு.தன்னைச் சந்தேகப்படுவார்களோ என பயந்த சுனில் அருகில் இருக்கும் காட்டில் அடைக்கலமடைந்தார்.சுனில் நினைத்தது பொன்றே சந்தேகப்பட்ட போலீஸ் வீட்டில் இருந்த அவரின் மனைவி திவாலி மற்றும் குழந்தைகளையும் சிறையிலடைத்தது.
சில நாட்களுக்குப் பிறகு வெளியே வந்த சுனில் நடந்த செய்தியறிந்து போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாத சுனில் மீதோ அரசுக் கெதிராகச் சதிச் செயலில் ஈடுபட்டமை, பயங்கர ஆயுதம் மற்றும் வெடி மருந்துகளை வைத்திருந்தமை போன்ற ஏழு குற்றங்களில் திணிக்கப்ட்டு சிறைத்தண்டனை விதிக்கபட்டது. தெற்கு மிட்னாபுரில் உள்ள சிறையில் சுனிலைப் போன்றே கிட்டதட்ட 141 க்கும் மேற்பட்ட பழங்குடி ஆண்களும் பெண்களும் மாவோயிஸ்டுகளெனப் பொய் குற்றம் சுமத்தப் பட்டு அடைக்கப்பட்டனர்.காடுகளின் அருகில் இவர்கள் வீடு இருப்பதாலேயே தாங்கள் மாவோயிஸ்டுகளெனச் சித்தரிக்கபடுவதாக இம்மக்கள் கூறுகின்றனர்.
இந்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் அடிவருடியாகச் செயல்பட்டு வரும் இந்த அரசு நக்சல் புரட்சியாளர்களை கொன்றொழிப்பதாகக் கூறி தன் மக்கள் மீதே உள் நாட்டுப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இப்பாசிசத்தை அம்பலப் படுத்த வேண்டியது நம் அனைவரின் மிக முக்கியமான கடமையாகும்.
This entry was posted on ஜூலை 18, 2010 at 1:00 முப and is filed under உள்நாட்டுப் போர், சத்தீஸ்கர், பழங்குடி மக்கள், போலிஸ் அராஜகம், மாவோயிஸ்டு, லால்கர், விமர்சனங்கள், SOCIAL ISSUES with tags உள்நாட்டுப் போர், பழங்குடி மக்கள், போலிசு அராஜகம், மாவோயிஸ்டு, மிட்னாபூர், லால்கர். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
ஜூலை 27, 2010 இல் 8:26 பிப
இன்னும் அம்பலப்படுத்துங்கள்.